மக்களின் வரிபணத்தை எப்படி செலவு செய்ய போகிறோம் என்ற வரைவு தான் பட்ஜெட். வரும் நிதியாண்டின் பட்ஜெட் நேற்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப் பட்டது. அதில் பல்வேறு துறை சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பெட்ரோல், டிசல் விலை உயர்வு தான். ஏற்கனவே உச்சத்தில் இருந்த ஒன்றை மேலும் மேலும் அதிகரித்து வெகுஜன மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
0 notes
நாட்டின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. தமிழகத்தில் அசைக்க முடியாத இடத்தை திராவிட முன்னேற்றத் தக்கவைத்துள்ளது. தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் திமுக 37 இடங்களை தனகாக்கிக் கொண்டது. ஆனால் தமிழகத்திலோ 39 தொகுதிகள், ஒரு தொகுதிக்கான தேர்தல் நடக்காமல் போனதுக்கும் திமுகவே காரணம். இதனை திமுகவினரே மறுத்துப் பேச முடியாத அளவிற்கு ஆவணங்கள் வெளியானது.
0 notes
தமிழக அரசி���்கு எதிராக வாக்களித்ததாக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ க்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மற்றும் தினகரன் தரப்பு வழக்கு தொடுத்த போது சபாநாயகர் முடிவே இறுதியானது நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு சென்றனர்.
0 notes
கடந்த 2009ம் ஆண்டு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவாகவும் பேசியதால் ஆயிரம் விளக்கு பகுதி போலீஸார் வைகோ மீது தேசத்துரோக வழக்கை பதிவு செய்தனர்.
0 notes
2013 ல் மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கொண்டுவந்தது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை கொண்டு வந்தது.
0 notes
“மாடு கட்டி போரடித்து மாளாது என்று யானை கட்டி போரடித்த நிலம்” தமிழ் நிலம். உலகிலேயே முதலில் பதம் பார்த்து பயிரிடப்பட்டது தஞ்சை தரணி என்கிறது ஆய்வு. வரப்பிற்குமேல் ஏறி நின்று கையை உயர்த்தினால் கை நுணிக்கும் மேலே வளர்ந்த கம்பீரமான மாப்பிள்ளை சம்பா, கருடஞ்சம்பா போன்ற நெல்மணிகளெல்லாம் புகைப்பட ஆவணமாக்கிவிட்டோம். தஞ்சை ஒரு போகம் விளைந்தால் தமிழகத்திற்கே உணவளிக்கலாம்.
0 notes
குடும்ப அரசியலை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள் பல இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவிகளை வாரி வழங்கி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் அவரது மகன் முக.ஸ்டாலின் மேயர் முதல் துணை முதலமைச்சராகவும். கட்சி பணிகளில் அடிப்படை உறுப்பினரில் ஆரம்பித்து செயல் தலைவராகவும் இருந்தது ஊரறிந்தது. அதே பார்முலாவை தான் செயல்படுத்தப் போகிறது இன்றைய திமுக. ஆம், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் என்ற முக்கிய பொறுப்பில் அமர்த்தப் படுகிறாராம்.
0 notes
இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலிமை சேர்த்து வந்த அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிப்படியாய் முன்னேறி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்குத் தேர்வாகியவர் அம்பத்தி ராயுடு. நீண்ட நாட்கள் நேரம் எடுத்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை ஒரே நாளில் குண்டு வைத்துத் தகர்த்துப் போல் இருக்கிறது அவரது முடிவு.
0 notes
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்து கூடப் பெறமுடியாத நிலையில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்குப் பிறகு காங்கிரஸ் ஜார்கண்ட் மாநிலத்தவர் அஜோய் ராய் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வரிசையாக ஒடிசா, உத்திர பிரதேசம், கர்நாடக, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் யா���ும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
0 notes
��திமுகவின் தலைமை டிடிவி தினகரனை ஒதுக்கியதால் அவர் தனது அரசியலை முன்னெடுக்கத் துவங்கிய அமைப்பு தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். ஆரம்பத்தில் தினகரன் துவங்கிய அமமுகவிற்கு அமோக வரவேற்பு இருந்தது.
0 notes
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார். மேலும் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இத்திட்டம் சோதனை ரீதியாக அமல்ப்படுத்தப்பட்டது.
0 notes
தற்போது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது உலகக் கோப்பை 2019. கடந்த உலகக்கோப்பைகளைப் போல க்ரூப் பிரிக்கப் பட்டு விளையாடாமல் அனைத்து நாடுகளும் மோதிக்கொள்வது சுவாரஸ்யத்தை தூண்டுகிறது. இந்திய அணி விளையாடி வரும்விதம் திருப்தி அளிக்கும் விதமாக அமைகிறது. இதுவரை இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் தான் தோல்வியைத் தழுவியுள்ளது.
0 notes
மக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தேனி மக்களவை தொகுதி உள்ளது.
0 notes
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.
0 notes
மக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
0 notes
பல்வேறு வெளிநாடுகளில் வசித்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்துள்ளனர். தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியுள்ள நிலையில், நீங்கள் உங்கள் வீட்டிலில் இருந்து கொண்டே உங்கள் வாக்கை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்து உள்ளீர்களா? அல்லது உங்கள் வாக்கு இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளீர்களா?
0 notes
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ஒரு குடவுனில் இருந்து 11.5 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
0 notes