Tumgik
#5.2.2007
schwimmtagebuch · 11 months
Text
Habe mich so beeilt, weil ich Angst hatte, dass er schon weg ist, aber er schwamm noch in der sechsten Bahn. Nach ein paar Längen ist er stehen geblieben, er hat auf mich gewartet! Als ich bei ihm war, hat er Hallo gerufen, ich habe ihn gefragt, was er da mache, er hat es wieder nicht verstanden. Ich verstehe es wirklich nicht! Er ist zu mir hergekommen, ich habe geknurrt und es noch einmal gesagt und gelacht, er hat zum 6er geschaut und gesagt: Ach, in der sechsten Bahn? Die war vorher frei, die ganze…. Er ist weiter weggegangen, wir sind weitergeschwommen, er hat mich überholt und als wir unten waren, ist er in die siebte Bahn geflitzt wie eine Libelle. Das war unmissverständlich, warum kann ich nie den Mund halten? Er wäre sicher da geblieben, wenn ich nicht so blöd gefragt hätte. Störe ich seine Konzentration oder mag er mich nicht oder wollte er auch einen Scherz machen? Bin durchgeschwommen, es war befreiend, er hat auch nicht mehr aufgehört, wir waren ganz schnell, er hat sein Waschbrett unter den siebten Sockel gelegt und ist wieder richtig geschwommen, ziemlich lange. In seiner Bahn war einer, der ist genauso elegant und schnell geschwommen wie er. Die sechste Bahn war ganz voll, nachdem er rausgeflitzt ist, habe gewartet, dass er stehen bleibt, um mich zu verabschieden, aber er ist immer weiter und weiter geschwommen. Um halb drei ist er raus gegangen, ich schwamm zum shallow end, zu ihm hinunter, er hat mir von seinem Startblock aus gewinkt und ist weggegangen, habe ohne nachzudenken seinen Namen gerufen, jetzt kann ich es endlich, er hat sich umgedreht, er hat es gehört, er ist zurückgekommen. Ich habe gesagt, dass ich mich nur verabschieden wollte, er ist stehen geblieben, er war erstaunt, hat pikiert geschaut und sich auch verabschiedet, ist schnell weggegangen. Ich habe ihm im Schwimmen nachgeschaut, warum kann ich ihm nie das sagen, was ich ihm wirklich sagen will? Es geht einfach nicht. Es ist nicht mehr so wie im letzten Jahr. Hat er sich geärgert, weil ich ihn aufgehalten habe? Unsere Vertrautheit ist uns abhanden gekommen, unser Vögelchen ist davon geflogen. Er ist zur Treppe gegangen und hat nicht mehr hergeschaut. Hat er sich überlegt, was ich von ihm wollte, hat er wieder Angst bekommen? War es nicht offensichtlich? Bin bis nach drei weiter geschwommen, habe ihn wieder nicht auf der Straße gesehen.
Manfred hat mich gefragt, wann er mich einteilen solle, jeden Tag, er hat mich angeschaut Du bist ein Tier, das war erotisch gemeint, aber er wollte sagen ein Arbeitstier. Ich habe geblinzelt, er hat mich eingetragen, er hat mir einen schönen Abend gewünscht, ich war wieder die Letzte. Er ist dagestanden und hat mir nachgeschaut, ich habe gerufen: Danke, dir auch. Bin zu müde für alles, ich gehe schlafen, ob Adam morgen wieder da sein wird, habe heute nicht damit gerechnet, aber er war da. Gute Nacht, mein schöner Liebling!
Tumblr media
0 notes
tamilnewstamil · 6 years
Photo
Tumblr media
மேட்டூர் அணை ஜூன் 12 -ம் தேதி திறப்பு; மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல் மேட்டூர் அணை ஜூன் 12 -ம் தேதி திறக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்லி, வேண்டுமென்றே தாமதப்படுத்தி, 104 நாட்கள் கடந்த நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் அரசிதழினை மத்திய அரசு அரைகுறை மனதோடு வெளியிட்டிருப்பது, ஓரளவு ஆறுதலை தருவதாக இருந்தாலும், இந்த உத்தரவை பெறுவதற்கு, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் நடத்திய போராட்டங்கள், விவசாயப் பெருமக்கள் ஏற்றுக் கொண்ட இழப்புகள் ஆகியவை, இந்த குறைந்தபட்ச உத்தரவாவது வெளிவரப் பெருமளவுக்கு உதவி செய்திருக்கிறது என்றே திமுக கருதுகிறது. உச்ச நீதிமன்றம் 16.2.2018-ல் அளித்த இறுதித் தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை அளிக்க, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், விவசாயிகளின் அமைப்புகளும், பொதுமக்களும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றியாகவே, கடந்த 18.5.2018 அன்று உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்ட வரைவுத்திட்டம் அமைந்தது. ஜூன் 1-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறியிருந்த நிலையில், இந்த இடைப்பட்ட 13 நாட்களில் மாநிலங்களில் இருந்து ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டிய பெயர்களையும் பெற்று, தலைவர், உறுப்பினர்கள் யார், யார் என்ற விவரத்துடன் முழுமையாக காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் இறுதி வரைவுத்திட்டத்தின் அடிப்படையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்பது மட்டுமே அரசிதழில் வெளியாகியிருக்கிறது. இதுதவிர, ஏற்கெனவே 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்டுள்ளது. இப்படி திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான நீர் ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த திருத்தப்பட்ட இறுதித்தீர்ப்பின் நீர் பங்கீட்டு அளவுகள், மத்திய அரசின் இந்த அரசிதழிலும் இடம்பெறவில்லை. தனியாகவும் திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பும் அரசிதழில் வெளியாகவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களில் 5 பேர், அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்திய அரசை சார்ந்தவர்கள் என்பதால், ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு உறுதி செய்யப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் வரைவுத்திட்டத்திலோ, ஆணையம் அமைக்கும் அரசிதழிலோ இடம்பெறவில்லை. அவர்கள் மத்தியில் ஆளும் பாஜகவின் எண்ணத்தைத் தான் செயல்படுத்துவார்கள் என்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாது. ஆகவே, மத்திய அரசு ஏதோ உள்நோக்கத்துடன் இன்னும் தெளிவின்மையையும், குழப்பத்தையும், தாமதத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களின் மனதில் எழுகிறது. காவிரி நதி நீர்ப் பிரச்சினையைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை நடத்தி முதன்முதலில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று 5.9.1969-ல் கடிதம் எழுதியது, நடுவர் மன்றம் அமைக்க முதன்முதலில் 17.2.1970-ல் கோரிக்கை விடுத்தது, 2.6.1990 அன்று நடுவர் மன்றம் அமைத்தது, 20.7.1990-ல் முதல் விசாரணையில் பங்கேற்றது, அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றுக் கொடுத்தது. இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் 11.8.1998 அன்று வரைவுத்திட்டம் உருவாக்கி, அதற்கு பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் 14.7.2000 அன்று அமைத்தது, முடங்கிக் கிடந்த காவிரி வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து 5.2.2007 அன்று நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை பெற்றது, என அனைத்துமே திமுக ஆட்சியின், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் என்பதை காவிரி டெல்டா விவசாயிகளும் தமிழக மக்களும் நன்கறிவர். உச்ச நீதிமன்றம் அளித்த காவிரி இறுதித்தீர்ப்பின் அடிப்படையில், வரைவுத்திட்டம் உருவாக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழகத்தில் திமுகவும், தோழமைக் கட்சிகளும், அனைத்துத்தரப்பு மக்களும் நடத்திய தன்னெழுச்சியான போராட்டங்கள் காவிரி நதிநீர் வரலாற்றில் சிறப்புமிக்கவை. அமைதியான அறவழிப் போராட்டங்கள் நடைபெற்ற அந்த நேரத்தில்தான், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே வேண்டுகோள் விடுத்தார். இன்றைக்கு மத்திய அரசு காவிரி வரைவுத்திட்டத்தை வெளியிடவும், இந்த குறைந்தபட்ச காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று அரசிதழ் வெளியிடவும் முன் வந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் நடத்திய போராட்டத்திற்கும், எத்தனையோ முறை கால அவகாசம் கேட்டு, முரண்டு பிடித்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாமாகவே தொடர்ந்து அளித்த அழுத்தமுமே காரணமாகும். ஆகவே, இந்த ஆணையம் அமைக்கும் அரசிதழ் தமிழக மக்களுக்கு கிடைத்த முதல்நிலை வெற்றி என்றாலும், வருகின்ற ஜூன் 12 ஆம் தேதியன்று குறுவைப் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால்தான் அது ஓரளவுக்கேனும் மனநிறைவை ஏற்படுத்தும். இல்லாவிட்டால் பெருவெற்றி என்று கொண்டாடுவதில் பொருளில்லை. கொண்டாடினால், சர்க்கரை என்று காகிதத்தில் எழுதிவைத்துக் கொண்டு, ஆகா! இனிக்கிறது, இனிக்கிறது என்று தானும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற்றுவதற்குச் சமமாகிவிடும். எனவே, தலைவர், உறுப்பினர்கள் கொண்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அணைகளை அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, சுதந்திரமான தன்னாட்சி அதிகாரங்கள் இருக்கும் அளவிற்கு விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலான நீர்ப்பங்கீடுகள் குறித்து ஓர் அரசிதழ் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இப்போதாவது, அதற்கான முழுமூச்சிலான நடவடிக்கைகளில், மத்திய அரசிடம் கைகட்டிச் சேவகம் செய்வதை மறந்து, தன்மானத்தோடு தலைநிமிர்ந்து, தமிழக அரசு உடனடியாக ஈடுபட்டு, ஜூன் 12 ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையைத் திறப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Source: The Hindu
0 notes
schwimmtagebuch · 11 months
Text
Bin mit der U6 zur Endstation gefahren, weil ich so müde war und keine Energie mehr hatte, außer im Zug zu sitzen und aus dem Fenster zu schauen. Die U6 fährt an der neuen und an der alten Donau vorbei, die Boote lagen verlassen dort, das Wasser war unberührt. Dann fuhr ich zurück zum Westbahnhof und ins Institut wie sonst immer. Wunderte mich, warum ich Adam nie vor der Stadthalle oder auf der Straße oder in der U-Bahn treffe, vielleicht ist er ein Engel oder er versteckt sich vor mir. Ich muss es ihm jetzt endlich sagen, bevor es zu spät ist. Als er am Beckenrand saß, sah ich, was für kleine Füße er hat. Bin ganz abweisend geworden, weil ich ihn eigentlich umarmen wollte, so abweisend wie er. Wenn wir uns doch schon erkannt hätten, warum können wir uns nicht zu erkennen geben, was ist daran so schwer? Bin zu spät gekommen, weil ich Pei-Yings Computer zu mir gebracht habe, war um zehn zu Hause, wir haben einen Brief korrigiert, habe gedacht, es sei elf Uhr, aber als wir bei mir waren, war es schon ein Uhr. Wir haben den Computer aufgestellt und I GING gespielt, welches Zeichen hatte ich, die Annäherung? Ich habe mich nicht konzentriert, weil ich schon im Wasser sein wollte.
Tumblr media
0 notes
tamilnewstamil · 6 years
Photo
Tumblr media
இன்று அனைத்துக்கட்சி கூட்டம் – காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. #CauveryVerdict #AllPartyMeeting சென்னை: காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள் மீது கடந்த 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டு இருந்தது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதிலுள்ள சாதக, பாதக அம்சங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச்செல்லவும், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை முழுமையாக பெறவும், சட்டவல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, தேவையான தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கப்படும்” என்று தீர்ப்பு வெளியான அன்று தெரிவித்தார். கடந்த 19-ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக 22-ந் தேதி காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அரசு அறிவித்தது. இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களை பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரியைப் பொறுத்தவரை அனைவரும் மனமாச்சரியங்களை மறந்து ஒன்றுபட்டு, தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்கான அனைத்து வழிவகைகளையும் ஆலோசிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து கட்சி கூட்டத்துக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை வரிசை போன்றவை பற்றியும் கேட்டறிந்தார். இந்த கூட்டத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி சார்பில் பிரதிநிதிகளுக்கும், விவசாயிகள் சங்கம் சார்பில் தலா ஒருவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 10 விவசாயிகள் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வேட்டவலம் மணிகண்டன், அய்யாகண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கடிதத்தில், “காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள இறுதித் தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக 22-ந் ���ேதியன்று (இன்று) காலை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் விவசாய சங்கத்தின் தலைவர் என்ற முறையில் தாங்களோ அல்லது தங்களின் பிரதிநிதியோ கலந்துகொண்டு தங்களுடைய மேலான கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆகியவற்றுக்கு தகுதியின் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. எந்தெந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் முடிவு செய்ததாக தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களைச் சேர்த்து மொத்தம் 44 இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு கருத்து தெரிவிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். பின்னர் அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் கருத்து கூறுவார்கள். மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கூறிய கருத்துகளை தொகுத்து கூட்ட இறுதியில் தீர்மானம் வாசிக்கப்படும். இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது மற்றும் டெல்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரி ஆகியோரை சந்திப்பது பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. #CauveryVerdict #CauveryWater #CauveryIssue #AllPartyMeeting Source: Maalaimalar
0 notes