என்னோடு ஒருமுறை அன்பாக பேசமாட்டானா?
ஒரு முறை போன் எடுக்கமாட்டாளா?
எங்களை அன்போடு விசாரிக்க மாட்டார்களா?
என்று எத்தனை இதயங்கள்
ஏங்கிக்கொண்டிருக்கிறது…….
ஒரு சில நிமிடங்கள் அன்பாக பேசுவதில் நமக்கு
என்ன குறைந்து விடப் போகிறது.
நாம் எத்தனை இலட்சம் சொற்களை பேசுகிறோம்
அதில் ஒரு சில வார்த்தைகள் ஒரு இதயத்தை குளிர்விக்குமென்றால், மனதினில் மகிழ்ச்சியை பூசுமென்றால், அது எத்தனை பெறுமதியானது.
கொடுக்கக்கொடுக்க அதிகரிப்பதல்லவா அன்பு.
அன்பான வார்த்தைகளை பேசும் போது நமது மனமும் ஆனந்தப்படுகிறதல்லவா
கருணை, அன்பு, தியாகம், இவை தானே வாழ்வை அழகாக்குகிறது.
இதயத்தில் நிறைந்த ஒளியோடு அன்பான வார்த்தைகளை பேசுவோம்,
அன்பாக விசாரிப்போம், உதவுவோம்
ஒ----- என்ன அழகிய வாழ்க்கை ஒவ்வொருவரும் உணர்வீர்கள்..
0 notes
#அன்பினால்ஆனதிவ்வுலகு# | #வேலணையூர்-தாஸ்# | #அன்பாக-பேசமாட்டானா?# |#என்ன...
0 notes
https://www.youtube.com/watch?v=XDJMyLQWsUU
0 notes