TNPSC coaching in Coimbatore
TNPSC coaching in Coimbatore
Tamil Nadu Public Service Commission organizing and conducting recruitments for government jobs in Tamil Nadu district. It is working in parallel with UPSC (Union Public Service Commission). Examinations conducted by TNPSC are strictly confidential, the syllabus contains History, Politics, Geography, Current affairs, Basic and advanced Science, Mathematics, Tamil, and English. TNPSC updates its syllabus and modules as part of its curriculum. These changes will affect the performance of candidates who are preparing for the exam for a long time. But these updates and changes will be automated by a training institution by their experience. Abdul Kalam IAS Academy provides the best coaching in Coimbatore for TNPSC aspirants. This academy provides all updates regarding TNPSC examinations and provides the best coaching for TNPSC. For more queries on TNPSC, coaching methods, fee structure, and duration call +91-9600594078 or visit www,abdulkalamiasacademycom.
0 notes
பாரதியார்
பாரதியார் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாளில் (11/12/1882) தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் தந்தை சின்னசாமி ஐயர்; தாயார் இலட்சுமி அம்மாள். பாரதியாரின் இயற்பெயர் சி. சுப்பையா என்கிற சுப்பிரமணியம் . ( TNPSC EXAM )
புலமைக்கு பெருமை
1893 ஆம் ஆண்டில் எட்டயபுர மன்னருடைய அவைக்களத்தில் சிவஞான யோகியின் தலைமையில் புலவர்கள் கூடியிருந்தனர். அப்புலவர்கள் 11 வயது சுப்பையாவின் கவிபாடும் திறனைக் கண்டு வியந்தனர். அவர் நாவில் கலைமகள் தாண்டவமாடுவதைக் கண்டு பாரதி ( கலைமகள் ) என்ற பட்டத்தினை அவருக்கு வழங்கினார்.
புலவர்கள் வழங்கிய இந்தப் பட்டமே சுப்பையாவின் பெயருக்கு மகுடமாக என்றென்றும் நிலைத்துவிட்டது. அன்று முதல் சுப்பையா சுப்ரமணிய பாரதி ஆனார்.
திருமண வாழ்க்கை
பாரதியாருக்கு பள்ளி நாட்களிலேயே அவருடைய 14 வயதிலேயே திருமணம் நடந்தது. 1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் நாள் கடையத்தைச் சேர்ந்த செல்லப்பா ஐயரின் புதல்வி செல்லம்மாள் என்ற 7 வயதுச் சிறுமிக்கும் பாரதிக்கும் அவரது தந்தையார் திருமணம் செய்து வைத்தார்.
பாரதிதாசன் பாராட்டியமை
1. பாரதி பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
2. அவன் ஒரு செந்தமிழ் தேனீ
3. சிந்துக்குத் தந்தை
4. குவிக்கும் கவிதைக்கு குயில்
5. நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
6. "தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்" பற்றி என்னென்று சொல்வது......
காசி நகரத்து வாழ்க்கை ஒரு திருப்புமுனை
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பிரவேச பரீட்சையில் தேறினார். காசி வாழ்க்கை பாரதியாரை பன்மொழிப் புலவராக மாற்றியது.
காசியில் தான் கச்சம் வைத்து வேட்டி கட்டும் பழக்கமும், தலைப்பாகை கட்டும் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டது. அவர் மீசை வைத்துக் கொண்டதும் அங்கேதான்.
எட்டயபுர சமஸ்தான பணி
விக்டோரியா மகாராணி இறப்பிற்கு பின் ஏழாம் எட்வர்ட் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியை ஒட்டி, பாரதியார் 1902 ஆம் ஆண்டு காசியில் இருந்து எட்டயபுரம் திரும்பினார். எட்டயபுரத்தில் மன்னருக்கு தேவையான புத்தகங்கள் படித்துக்காட்டுவது, வேதாந்தா, தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வது இவைதாம் பாரதியாரின் அன்றாட அலுவல்கள்.
மதுரையில் ஆசிரியப் பணி
எட்டயபுர சமஸ்தானப் பணியில் இருந்து 1904 ஆம் ஆண்டு வெளியேறி, மதுரையில் புலவர் கந்தசாமி நடத்திய 'விவேகபாநு' என்ற பத்திரிக்கையில் 1904 ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில் பாரதி��ாரின் 'தனிமை இரக்கம்' என்ற பாடல் வெளியாயிற்று. இதுவே அச்சு வடிவில் வெளிவந்த முதல் பாடலாகும்.
மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் தற்காலிகமாகத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மூன்று மாதம் மட்டுமே இப்பணியில் இருந்தார்.
பத்திரிக்கைப் பணி
சுதேசமித்திரன் அக்காலத்தில் தேசிய இயக்கத்திற்குத் துணையாய் செயலாற்றிய பத்திரிக்கை ஆகும். தமிழ்ப் பத்திரிக்கையின் தந்தை எனப் பாராட்டப் பெற்ற ஜி. சுப்ரமணிய ஐயர் தாம் சுதேசமித்திரனின் உரிமையாளராக இருந்தவர். அவர் 1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதியாரை சுதேசமித்திரன் ஆசிரியர் குழுவில் சேற்றுக்கொண்டார்.
தமது எண்ணங்களையும், உணர்வுகளையும் எந்த ஒரு தடையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியிடும் நோக்கோடு அவர் தொடங்கிய புதிய தேசிய இதழே சக்கரவர்த்தினி ஆகும்.
காங்கிரஸ் மாநாடுகளும் தேசியத் தலைவர்களின் தொடர்பும்
1905 ஆம் ஆண்டு காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும், 1906 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார் பாரதியார்.
அம்மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பாரதியார், அச்சமயம் டம்டம் நகரிலே இருந்த நிவேதிதா அம்மையாரைத் தரிசித்து அருளுபதேசமும் ஆசியும் பெற்றார்.
இந்தியா பத்திரிக்கையின் தொடக்கம்
1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா என்ற பத்திரிக்கையை தொடங்கினார். பத்திரிக்கையின் முகப்பு பக்கத்தில் சுதந்திர உணர்வை ஊட்டத்தக்க நாட்டு நடப்பை காட்டக்கூடிய கருத்துப் படங்களை
(cartoons ) வெளியிட்டார். இம்முறையை முதன்முதலில் பத்திரிக்கைத் துறையில் கையாண்டு வெற்றி கண்டவர் பாரதியார் ஆவார். பாலபாரத் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையும் தொடங்கினார்.
பாரதியின் கனவு
கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே. அவரின் கனவு நனவாகிய பாடல்,
"வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்" எனத் தொடங்கும் பாடல்.
பாரதியைப் பற்றி பாரதி
"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோராதிருத்தல்" - பாரதி
"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி". - பாரதி
தமிழைப் பற்றி பாரதி
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்"
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைபோல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை "
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"
"வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ"
"---ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் சீலிக்கச் செய்வீர்"
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்"
"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்"
பாரதியின் படைப்புகள்
1. குயில்பாட்டு
2. கண்ணன்பாட்டு
3. சுயசரிதை
4. தேசிய கீதங்கள்
5. பகவத் கீதை
6. புதிய ஆத்திச்சூடி
7. பாஞ்சாலி சபதம்
8. சந்திரிகையின் கதை
9. ஞான ரதம்
10. ஆறில் ஒரு பங்கு
இறப்பு 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் தன்னுடைய 39 வயது முடியும் முன்னரே மரணமடைந்தார்.
தன் இறுதி ஊர்வலத்தில் குறைந்த நபர்களே பங்கு பெற வேண்டுமென கோரிக்கை வைத்து இறந்த பெருமைக்குரியவர். இவரின் இ
ருதி ஊர்வலத்தில் 14 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு அவரின் ஆசையை நிறைவேற்றினர்.
0 notes
Wanna be up to date with the current affairs happening in and around the world?
Question Cloud is the absolute platform for all the aspirants who are preparing for the competitive exams.Current Affairs is fabricated in a way that our accomplished tutors do a meticulous search on current affairs all around the world with test series and mock test series.
Question Cloud covers all the topics in current affairs including sports, national & international awards, economy, rank & reports, summits & conferences, current banking news, agreements, appointment, science, government schemes.
For more information, Visit: questioncloud.in.
0 notes